Ad Widget

பெண் தொழிலாளர்கள் சங்கம் அங்குரார்ப்பணம்

womwenபெண் தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலான ‘பெண் தொழிலாளர்கள் சங்கம் உலக தொழிலாளர் தினமாகிய நேற்று யாழில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்புக்கான மையத்தின் ஏற்பாட்டில் யாழ்.ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தொடர்பகம் காரியாலயத்தில் நேற்றயதினம் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதில், வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் உரிமைகள் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.

இதன்போது, பெண்களிற்கான உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதனையடுத்து 19 பெண் உறுப்பினர்களை உள்ளடக்கிய பெண் தொழிலாளர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், ஒத்துழைப்புக்கான மையத்தின் அங்கத்தவர்கள், பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts