Ad Widget

இளைஞன் மீது சுன்னாகம் பொலிஸாரின் கொடூர தாக்குதல்!!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஒன்றினை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும் அங்கு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் அவசர சிகிச்சைக்காக கடந்த 28ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ​போது பொலிஸார் தம்மை கொடூரமாக தாக்கியதாக இளைஞன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞனைப் பரிசோதித்த மருத்துவர்கள், பொலிஸாரின் தாக்குதலினால் அவரது விலா மற்றும் முதுகெலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Posts