Ad Widget

இளைஞன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

fight-warகரவெட்டி காட்டுப்புலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லிடியப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த உதயன் நிரோசன் (23) என்பவரே தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றின் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய போது இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts