Ad Widget

இளம் பெண் சட்டத்தரணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இராணுவம்!!

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவர் தனது மூத்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய போது வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினர் பெண் சட்டத்தரணியை மறித்து சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது தான் சட்டத்தரணி என , தனது அடையாள அட்டையை இராணுவத்தினரிடம் காண்பித்துள்ளார். அவ்வேளை அவருடைய கைப்பையை தாம் சோதிக்க வேண்டும் என வேண்டிய இராணுவத்தினர் கைப் பையினுள் இருந்த பொருள்களை வீதிகளில் கொட்டி , கைப்பையை சோதனையிட்ட பின்னர் வீதியில் கொட்டப்பட்ட பொருள்களை பொறுக்கி எடுத்து செல்லுமாறு இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

அதற்கு சம்மதிக்காத சட்டத்தரணி , பொருள்களை வீதியில் கைவிட்டு தனது கைப்பையை இராணுவத்தினரிடமிருந்து வாங்கி சென்றுள்ளார்.

இராணுவத்தினரின் இந்த அநாகரிக செயற்பாடு குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மூத்த சட்டத்தரணிகள் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக மாலை வேளைகளில் பல இடங்களில் இராணுவத்தினரின் வீதி சோதனை நடவடிக்கைகளும் பதிவுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts