Ad Widget

இல்ல விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!!

நிலவும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக பாடசாலைகளில் முதலாம் தவணையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட ஏனைய வெளிப்புற போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பான அறிவித்தல் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் அதிபர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலவும் வெப்பத்துடனான காலநிலை, ஏப்ரல் மாதம் வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரமும் இதனால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பில் வைத்தியர்கள் தெளிவுபடுத்தியதன் அடிப்படையிலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts