இலங்கையில் நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை தொடர்பில், மக்களுக்கு விசேட எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அதிகமான வெப்ப நிலை காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக சிறுவர்களின் உடலில் வறட்சி நிலை ஏற்படாமல் பாதுகாக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அதிக வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, அதிக நீரை அருந்த வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதன்மூலம் உடல் வறட்சியை தணிப்பதுடன், கண் தொடர்பான நோய்களையும் தவிர்க்க முடியுமென மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.