நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 983ஆக உயர்வடைந்துள்ளது.
அவர்களில் 58ஆயிரத்து 75 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான ஆறாயிரத்து 585 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 323 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.