Ad Widget

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தள்ளது.

ஒருவருக்கு காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசாங்க மருத்துவமனை அல்லது அரச பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Related Posts