Ad Widget

இலங்கையில் ஒரேநாளில் 749 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 749 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53ஆயிரத்து 62ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 425 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன்படி, இதுவரையில் பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தொற்று உறுதியானவர்களில் ஏழாயிரத்து 635 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, இலங்கையில் இதுவரை 256 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts