கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் முடிவை சீனா வரவேற்றுள்ளது.
அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியாவில் சீனாவின் கடல்சார் புதிய பட்டுப்பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முக்கிய சகாவாக விளங்குகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.