Ad Widget

இலங்கைக்கு கஞ்சா கடத்திய இரண்டு இந்தியர்கள் யாழில் கைது

இந்தியாவில் இருந்து கேரள கஞ்சாவினை கடத்தி வந்த இரண்டு இந்தியர்களை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த நிறையானது 50 கிலோ என்றும், அதன் பெறுமதி 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா எனவும் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களையும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts