Ad Widget

இறப்புச் சடங்குகளில் இனிமேல் பட்டாசு கொளுத்துவது தடை? – வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாணத்தில் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகிறது.

வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் குறித்த பிரேரணையை சபையில் முன்மொழியவுள்ளார் என்று தெரிய வருகிறது.

அவர் தனது பிரேரணையில், வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொழுத்தும் கலாசாரம் காணப்படுகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும்.

இதனைக் கட்டுப்படுத்த மாகாண உள்ளூராட்சி அமைச்சு திணைக்களத்தின் ஊடாக அனைத்துச் சபைகளுக்கும் அறிவுறுத்தலை வழங்க வேண்டும். அதன் ஊடாகப் பட்டாசு கொளுத்துவது தடை செய்யப்பட வேண்டும் என்று கோரவுள்ளாராம்.

Related Posts