Ad Widget

இரு தினங்களுக்கு மின் தடை

powercutயாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது..

எதிர்வரும் சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை சுன்னாகம், குப்பிளான், ஏழாலை, மயிலங்காடு, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி, மல்லாகம், மாவிட்டபுரம், கீரிமலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், அச்சுவேலி இடைக்காடு, பத்தமேனி, வளலாய், தொண்டமனாறு வீதிப் பிரதேசம், குஞ்சர்கடைப் பிரதேசத்தின் ஒரு பகுதி, உடுப்பிட்டி, தொண்டைமனாறு, வல்வெட்டித்துறை, வல்வெட்டி, நவிண்டில், கல்வியங்காடு, நல்லூர், செம்மணி, நாவற்குழி ஆகிய இடங்களில் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் பரமேஸ்வரா சந்தி, பலாலி வீதி, விஞ்ஞானபீடப் பிரதேசம், அரசடி வீதி, கொழும்புத்துறை வீதி, வைமன் வீதி, கோவில் வீதி, றக்கா வீதி, இராசாவின்தோட்டம், பழைய பூங்கா, அத்தியடி புது வீதி, சோமசந்தரம் அவனியூ, முலவைச் சந்தி, ஆஸ்பத்திரி வீதி, கச்சேரி நல்லூர் வீதி, கச்சேரியடி, புங்கன்குளம், ஈச்சமோட்டை, பாசையூர், குருநகர், கந்தர்மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படிப் பிரதேசம், கொன்வென்ட் பிரதேசம், பிரதான வீதி, மந்திகை, புலோலி, புற்றளை, சாரையடி, ஓராம் கட்டை, தம்பசிட்டி, பருத்தித்துறை நகரப் பிரதேசம் ஆகிய இடங்களிலும், மேலும் இதேநாள் காலை 09.00 மணியிலிருந்து 02.00 மணிவரை காரைநகரின் களபூமி, ஊரி, இபோச டிப்போ பிரதேசம், காரைநகர் கடற்படைப் பிரதேசம், தீவகம் முழுவதும் ஆகிய இடங்களிலும் மின்தடை அமுலில் இருக்கும்.

இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் அச்சுவேலி இடைக்காடு, பத்தமேனி, வளலாய், தொண்டமனாறு வீதிப் பிரதேசம், நெல்லியடியின் ஒரு பகுதி, வதிரி, அல்வாய் பிரதேசத்தின் ஒரு பகுதி, திக்கம் ஆகிய இடங்களிலும் மின் தடை அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related Posts