Ad Widget

இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி இருவர் காயம்

ஓட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர்.

இவர்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை பகல் காங்கேசன்துறை வீதி, சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றது. எதிரே வந்த ஓட்டோவை கருத்தில் கொள்ளாது மோட்டார் சைக்கிளைத் திருப்ப முற்பட்டவேளை இந்த விபத்து இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து கனகராயன்குளம், மன்னகுளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

விபத்தில் உயிரிழந்தவரது சடலம் வவுனியா வைதியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts