Ad Widget

இருபதுக்கு இருபது தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்துவீச்சில் பஹிம் அஷ்ரப் 3 விக்கெட்களும், ஹசன் அலி 2 விக்கெட்களும், ஷதப் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 20 ஓவர்களில் 125 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

இறுதியில் பாகிஸ்தான் அணி ஒரு பந்து மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் திசாரா பெரேரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என பாகிஸ்தான் கைப்பற்றியது.

Related Posts