Ad Widget

இராணுவ வாகனம் மோதியதில் பெண் படுகாயம்

மீசாலை, புத்தூர்ச் சந்தியில் திங்கட்கிழமை (25) மாலை வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர், இராணுவ வாகனத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மந்துவில் கிழக்கைச் சேர்ந்த லி.உதயமலர் (வயது 57) என்ற பெண்ணே இதில் படுகாயமடைந்துள்ளார்.

மீசாலை – புத்தூர்ச் சந்தியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவிருந்த பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியின் மறு பக்கத்திலிருந்து வீதியினைக் கடக்க முற்பட்டவேளை, சாவகச்சேரி நோக்கி பயணித்த இராணுவ பிக்கப் ரக வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts