Ad Widget

இராணுவத்துக்கு அஞ்சலி: மன்னிப்பு கோரினார் ‘தினகரன்’ பத்திரிகை ஆசிரியர்

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின்போது போரில் இறந்த இராணுவத்தினருக்கு மட்டும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

jaffna media

இதனால் அங்கு கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர்களும், ஊடக மாணவர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

போரில் பொதுமக்களும் வகை தொகையின்றி கொல்லப்பட்டனர்.

அவர்களுக்கும் அஞ்சலி செலுத்த ஏற்பாட்டாளர்கள் தவறியதால் இந்த நிலை ஏற்பட்டது.

பின்னர் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வளவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது ஊடகவியலாளர்கள் முதலில் ‘நீங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’, ‘இராணுவத்தினருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவது பொறுப்பான செயல் அல்ல’ என்று வலியுறுத்தினர்.

இதனால் சஞ்சலமடைந்த தினகரன் பத்தரிகை ஆசிரியர் எழுந்து, மெழிபெயர்ப்பு பிரச்சினையால் அந்த தவறு நிகழ்ந்துவிட்டது, அதற்காக தான் பகிரங்கமாகவே மன்னிப்புக் கோருகிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை

Related Posts