Ad Widget

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனாவிலிருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும்!

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தொற்று நோய் பிரிவினர் இதுகுறித்த தகவல்களினை வெளியிட்டுள்ளனர்.

சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொது இடங்களுக்கு செல்லும் போது 2 வயதுக்கும் அதிகமான அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts