கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன்கோவிலில் மழைவேண்டி வழிபாடு நடாத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கா் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.
இந்த நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனா்.
நேற்று காலை இரணைமடு குளத்திலிருந்து குடைபிடித்து ஊர்வலமாகச் சென்று கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்த வழிபாட்டில் விவசாயிகளுடன் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.