Ad Widget

இன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது அமைச்சுப் பணிகளை பொறுப்பேற்றார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர், என்னை நம்பி இப்பதவியை ஒப்படைத்திருக்கும் ஜனாதிபதிக்கும் எனது நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதுடன் எனது தாய் நாட்டின் இறைமையைக் பேணிக் காப்பதுடன் சிரேஷ்ட அநுபவசாலியான அமைச்சர் சுவாமிநாதனுடன் இணைந்து பணியாற்றுவதை ஒரு வரப்பிரசாதமாக கருதுகிறேன் என கூறினார்.

பிரதமரின் வழிகாட்டலில் எனது அமைச்சுப் பணிகள் தொடரும் அதேவேளை இனமத பேதங்களுக்கு அப்பால் நின்று மகத்தான மக்கள் பணி செய்வேன் எனவும் இதன் போது தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் அமைச்சர் சுவாமிநாதன், பெளஸி, துமிந்த திஸாநாயக்க, நிமல் ஸ்ரீபால டி சில்வா, மஹிந்த அமரவீர, பைஷர் முஸ்தபா உள்ளிட்ட அமைச்சர்களோடு பாராளுமன்ற உறுப்பிர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

Related Posts