Ad Widget

இன்றையதினமும் மருந்தகங்களைத் திறக்க அனுமதி

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts