நாட்டில் இன்று(திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக மாதாந்த வருமானம் பெறுவோருக்கு 06 வீதம் தொடக்கம் 36 வீதம் வரை 06 கட்டங்களாக வருமான வரி அறவிடப்படவுள்ளது.
மாதமொன்றுக்கு 3 இலட்சத்து 50 ஆயிரத்து ரூபாவை வருமானமாக பெறும் ஒருவர் ஒரு மாதத்திற்கு 52 ஆயிரத்து 500 ரூபாவை வரியாக செலுத்த வேண்டும்.