யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பது குறித்த அறிந்தால் அது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யலாம் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதன்போது, ‘பல்கலைக்கழக வளாகத்தில் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்தால் பொலிஸார் அதனைக் கவனத்தில் எடுப்பதில்லை’ என்று ஊடகவியலாளர்கள் வினாவியதிற்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் இதுவரையிலும் வரவில்லையெனவும், அவ்வாறு நடைபெற்றால் பொலிஸ் நிலையங்களிலோ அல்லது தலைமைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.