Ad Widget

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்

boys-fight-cartoonசுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று வியாழக்கிழமை (08) இரவு மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரெழு மேற்கைச் சேர்ந்த கார்த்திகேசு அழகராசா (44) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

மேற்படி வீதியின் வழியே குறித்த நபர் தனது மாட்டுடன் சென்றுகொண்டிருக்கும் போதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அவ்விடத்திற்கு பொதுமக்கள் வந்ததையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து குறித்த நபரை அப்பகுதி மக்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts