Ad Widget

இந்து மயானத்திற்கு அருகில் பல்கலை மாணவர் விடுதி அமைக்க பிரதேச சபை அனுமதி

jaffna-universityயாழ். பல்கலைக்கழகத்திற்கு மாணவர் விடுதி அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உரிய நடைமுறைகளுடன் நல்லூர் பிரதேச சபை தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக சபையின் தவிசாளர் வசந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாணவர் விடுதி அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பிரதேச சபையின் அனுமதியின்றி தன்னிச்சையாக மேற்கொண்டு வந்தனர்.

தற்போது விடுதி அமைக்கும் இடத்திற்கு அருகில் கொக்குவில் இந்து மயானம் அமைந்துள்ளது . இதனால் குறித்த பகுதியில் விடுதியை அமைப்பதனால் மயானத்தின் பாவனைக்கு தடை ஏற்படும் என்று எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர்.

அதனையடுத்து யாழ். பல்கலைக்கழகம் பேரவை கூட்டம் ஒன்றினைக் கூட்டி குறித்த விடுதி அமைப்பதால் மயானத்தின் பயன்பாட்டிற்கு தடை ஏற்பட மாட்டாது என்றும் அதனை அகற்ற கோரப்பட மாட்டாது என்றும் சபையுடன் ஒப்பந்தம் ஒன்றினையும் செய்து கொண்டுள்ளனர்.

அதனையடுத்து எமது கூட்டத்தில் முறைப்படி தீர்மானம் எடுக்கப்பட்டு தொடர்ந்தும் 5 மாடி கொண்ட விடுதியினை அமைப்பதற்கு பல்கலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts