Ad Widget

இந்திய மீனவர்கள் 26 பேர் கைது

arrest_1யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த போது கரையோர பாதுகாப்பு படை பிரிவினரும், இலங்கை கடற்படை பிரிவினரும் இணைந்து இவர்களை நேற்றிரவு 8 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 26 மீனவர்களும் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் இலங்கை கடற்படையினரால் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்நாடு காரைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் 5 ரோலர் படகுகளில் அத்துமீறி நுழைந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் 26 பேரும் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Related Posts