Ad Widget

இந்திய மீனவர்கள் 06 பேர் கைது

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 06 பேர் இன்று (08) இலங்கை கடற்படையினால் யாழ்ப்பாண நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் 06 பேர்களும் யாழ்ப்பாண நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

ஒரு ட்ரோலர் படகுடன் ஏனைய மீன்பிடி உபகரணங்களுடன் அவர்கள் கைதானதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த மீனவர்கள் ஐகதாப்பட்டினத்தினை சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று யாழ் மாவட்ட நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஐ.சுதாகர் தெரிவித்தார்.

Related Posts