Ad Widget

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

காற்றில் சிக்கிய நிலையில் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த 4 இந்திய மீனவர்கள், செவ்வாய்க்கிழமை(07) மாலை கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மேற்படி மீனவர்களை கடற்படையினர் மீட்டு தங்களிடம் ஒப்படைத்ததாகவும் இந்த மீனவர்கள் தமிழ்நாடு, இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

Related Posts