Ad Widget

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

jail-arrest-crimeநெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 26 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேந்திரரசா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 26 பேரை கரையோர பாதுகாப்பு படையினர் மற்றும் கடற்படையினர் கைதுசெய்து நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் 26 பேரையும் நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய இரண்டு தடவைகள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களும் நேற்று மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த யாழ் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேந்திராசா குறித்த மீனவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.

Related Posts