Ad Widget

இந்திய எழுத்தாளருக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நூல் இந்தியாவில் அண்மையில் எரிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.இலக்கிய குவியத்தின் ஏற்பாட்டில் யாழ் முனியப்பர் ஆலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று வியாழக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.

DSC_0074(1)

எழுத்தாளர் தெரிவித்த ஒரு கருத்துக்கு இந்து அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், ‘அவரது மாதொருபாகன்’ நூல் அண்மையில் எரிக்கப்பட்டது.

இதனால், எழுத்தாளர் தான் இதுவரையில் எழுதிய நூல்கள் அனைத்தையும் மீளப்பெற்றதுடன், தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்புக்கோரி இனி எழுதப்போவதில்லையெனவும் தெரிவித்திருந்தார்.

நூல் எரிக்கப்பட்டமை, ஒரு எழுத்தாளர் முடக்கப்பட்டமை கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Posts