இணுவில் – காரைக்கால் குப்பை விவகாரம்: எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம்!!

இணுவில் – காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் குறித்த கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ”சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக் கொழுத்தபடுவதால் சூழல் மாசடைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த பகுதி ”சித்தர்கள் பலர் வாழ்ந்து சமாதியடைந்த இடமாகக் கருதப்படுவதாகவும், சமாதி கோவில், ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைக்கால் சிவன் கோவில் ஆகியன இங்கு காணப்படுவதாகவும் இப் புண்ணிய பூமியிலேயே இவ்வாறு கழிவுகள் கொட்டப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த பகுதியில் இருந்து கழிவகற்றல் நிலையத்தை அகற்றுமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இது வரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts