அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இவரை வெளிவிவகார பிரதியமைச்சர் வரவேற்றுள்ளார். அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.