Ad Widget

ஆவா குழு சந்தேகநபர்கள் 87 பேரையும் வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி கோருகிறது காவல்துறை!

அண்மையில் ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 87 இளைஞர்களையும் பாழ்ப்பாணச் சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா காவல்துறை அனுமதி கோரியுள்ளது.

இவர்கள் அனைவரையும் ஒரே சிறையில் தடுத்து வைத்திருப்பதால் அவர்கள் பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களை வகுக்கக்கூடும் என்ற காரணத்தினாலேயே வேறு சிறைக்கு மாற்றக் கோரியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தற்போது யாழ்ப்பாணச் சிறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே ஆவா குழுவென சந்தேகிக்கப்படும் 87 இளைஞர்களையும் நாட்டிலுள்ள பல சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு நீதிமன்றங்களிடம் அனுமதி கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts