Ad Widget

ஆவா குழு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை இன்னும் பூர்த்திசெய்யப்படாத நிலையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இவ் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காலமாக யாழில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் ஆவா குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழில் கடந்த சில நாட்களாக ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts