Ad Widget

ஆளில்லாமல் இயங்கும் முச்சக்கரவண்டி: இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!

தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை வடிவமைத்துள்ளார் நுவரெலியா இளைஞர் ஒருவர்.

நுவரெலியா களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார என்ற நபரே இவ்வாறு தானியிங்கி முச்சக்கரவண்டியை கண்டுபிடித்தவராவர்.

இவர் முச்சக்கரவண்டியை ரிமோட் கொண்ரோல் ஊடாக இயக்கக் கூடிய வகையில் 5 நாட்களில் இதனை தயாரித்துள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும்.

இயந்திரவியல் தொழில் ஈடுப்பட்டுள்ள இந்த நபர் தனது எரிபொருள் ஊடாக இயங்கும் முச்சக்கரவண்டியை ரிமோட் கொண்ரோல் ஊடாக இயங்க வைப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சி பலனளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியை தலவாக்கலை நகரசபை மைதானத்தில் பார்வையிளர்களாக கூடியிருந்த அனைவரினதும் கவனத்தை ஈர்த்த விடயமாக இருந்தது.

”தனது சொந்த செலவில் தன்னிடம் உள்ள முயற்சியை கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த முச்சக்கரவண்டியை போல எதிர்காலத்தில் இன்னும் பல ரிமோட் கொண்ரோல் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய இயந்திரங்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் அதற்கான பொருளாதார ரீதியில் உதவிகளை செய்யுமிடத்து இன்னும் பல்வேறு வகையான தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளை கண்டுபிடிக்க முடியும்” எனவும் எமது சமிந்த ருவான் குமார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Posts