Ad Widget

ஆரியகுளத்தை அழகாக்கி புனரமைத்தல் செயற்றிட்டம் ஆரம்பமாகவுள்ளது!!

யாழ்.நகரின் மத்தியில் காணப்படுகின்ற ஆரியகுளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியின் பேறாக தனியார் ஒருவரின் நிதி அனுசரணையில் குறித்த குளமும் அதன் அயல் பகுதிகளும் புனரமைத்து அழகுபடுத்தப்படவுள்ளது.

ஆரியகுளத்தினை இரு கட்டமாக அழகுபடுத்தப்படவுள்ளது. இது தொடர்பான ஆரம்பகட்ட பணிகளான வடிவமைப்பு மற்றும் செலவீன மதிப்பீடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் அதன் அடுத்த கட்டப்பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அடுத்த வாரமளவில் ஆரம்பிக்க திட்டமிடப்படுகிறது.

இச் செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வற்கு மாநகர முதல்வர், ஆணையாளர், பொறியிலாளர், திட்டமிடல் பகுதி அதிகாரிகள் மற்றும் இறைவரி திணைக்களக அதிகாரிகளின் பங்கேற்புடன் களஆய்வு பணி நடைபெற்றது.

Related Posts