Ad Widget

ஆயுதங்களுடன் நின்ற நால்வர் கைது

கோண்டாவில் பகுதியில் வாள்கள், பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வீதியில் நின்றுகொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (15) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சண்டையொன்றில் ஈடுபடும் நோக்குடன் வீதியில் நின்றிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.

கோண்டாவில் பகுதியில் சனிக்கிழமை (14) மாலையில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புபட்டே இவர்கள் மேலுமொரு கைகலப்புச் சம்பவத்துக்கு தயாராக நின்றுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts