Ad Widget

ஆபத்தான கட்டத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது எரியும் நெருப்பில் எரிபொருளைச் சேர்ப்பது போன்றது – மருத்துவ வல்லுநர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை!!

கோவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவி வரும் நேரத்தில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்டா திரிபு காரணமாக தினசரி கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசின் முடிவு நெருப்புக்கு எரிபொருளைச் ஊற்றுவது போன்றது என்று சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நிலைமையை மோசமாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் சங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கோவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டின் சுகாதார அமைப்பை மூழ்கடிக்கும்.

நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பது வெறும் கனவாக இருக்கும்.

எனவே தற்போதைய சூழ்நிலையை மறுபரிசீலனை செய்து, தற்போதுள்ள சுகாதாரம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளைத் திருத்தவேண்டும்.

மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்து அவர்களுக்கு போதிய வருமானத்தை வழங்க வேண்டியதன் அவசியமாகும். ஆனால் குடிமக்களின் உயிரைக் காப்பாற்றுவதே தற்போது அதிக முன்னுரிமையாக இருக்க வேண்டும்- என்றுள்ளது.

Related Posts