Ad Widget

ஆனையிறவில் மயிலை வேட்டையாடியவர் இனங்காணப்பட்டார்

மயிலை வேட்டையாடிய நபர் தற்பொழுது இனங்காணப்பட்டுள்ளார் இவர் தங்கொட்டுவ பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் ஒருவரின் உறவினர் என அறியவந்துள்ளது.

peckcook-mayel-veddai-elephnetpass

குறித்த நபர் சட்டவிரோதமான துப்பாகியை உபயோகித்து மயிலை வேட்டையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆனையிறவு பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து மயிலை வேட்டையாடியதனை படம் பிடித்து அதனை தனது முகநூல் (facebook) தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது வன விலங்கு திணைக்களத்திற்கு குறித்த நபர் தொடர்பான அனைத்து விபரங்களும் அறியவந்துள்ளதுள்ளதாகம் தெரிகின்றது.

Related Posts