Ad Widget

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு யாழ். மாநகரசபை உறுப்பினர் கே.எம்.நிலாம் (நியாஸ்) உதவி!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு யாழ். மாநகரசபை உறுப்பினர் கே.எம்.நிலாம் (நியாஸ்) தனது முதல் மாதச் சம்பளத்தில் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்ற யாழ். மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டி மற்றும் ஆடைகள் போன்றவற்றை வழங்கியுள்ளார்.

மேலும் அப்பிள்ளைகளிடம் தந்தையின் விடுதலைக்காக இறைவனைப் பிரார்த்திப்பதுடன், இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனூடாக தந்தையின் விடுதலைக்காக பேசுவதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts