வல்வெட்டித்துறை, கம்பர்மலை பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் சர்வேஸ்வரன் (வயது 31) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதன்கிழமை (04) மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.