Ad Widget

ஆசிரிய உதவியாளர்கள் மாகாண சபைக்கு முன்பாக போராட்டம்

ஆறு வலயங்களைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் இன்று காலை வடக்கு மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் தம்மை தரம் மூன்றிலிருந்து இரண்டிற்கு தரம் உயர்த்தக் கோரியும், சம்பள அதிகரிப்பை வலியுறுத்தியும் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இன்றைய தினம் வடக்கு மாகாண சபையின் அமர்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts