Ad Widget

ஆசிரியரை தாக்கிய யாழ் இந்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கமறியல்

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆசிரியரை கடந்த 9ஆம் திகதி தாக்கிய அதே பாடசாலையை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினார்கள்.

இது தொடர்பான விசாரணை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்றது. இந்த மாணவர்களை விளக்கமறியில் வைப்பது ஏனைய மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.

ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் கௌரவமாக நடத்தப்படவேண்டியவர்கள் என நீதவான் கூறினார்.

ஆசிரியரைத் தாக்கிய இரண்டு மாணவர்களும் தற்போது பாடசாலையில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

யாழ்.இந்துக் கல்லூரி வாகனத்தின் கண்ணாடிகள் உயர்தர மாணவர்களால் உடைப்பு

Related Posts