Ad Widget

அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்ப உதவுங்கள்: மாவை

போரில் அழிந்துபோன தேசத்தையும் சிதைந்துபோன மக்களையும் மீள கட்டியெழுப்ப உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு அவசியம். அதற்கு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டம் முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சி தாக்கல் செய்தது.

மாவை சேனாதிராஜா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உள்ளிட்டவர்கள் இணைந்து இவ்வேட்புமனுக்களை நேற்று காலை யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தனர். அதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மாவை மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அந்த வகையில் வினைத்திறன் மிக்க வகையில் உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிப்பதற்கு வேட்பாளர்களை நியமித்துள்ளதாகவும், அவர்களை வினைத்திறனுடன் செயற்பட வைப்போம் என்றும் மாவை நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் பெண் தலைமைத்துவம் குறைவாக உள்ள போதும் அனைவரும் தமது அலுவலகங்களுக்கு வருகை தந்து அமோக ஆதரவை தெரிவித்ததாக மாவை குறிப்பிட்டார்.

Related Posts