Ad Widget

அல்வாய் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். அல்வாய் பகுதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து ஆணிணொருவரின்; சடலம் சனிக்கிழமை (27) காலை மீட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தை சேர்ந்த குடும்பஸ்தரான செல்லையா மகாலிங்கம் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts