Ad Widget

அர்ப்பணிப்புடன் நாம் செல்லும் பாதையே நிச்சயம் வெல்லும் – டக்ளஸ்

daklas‘சரியான திசை வழியில் அர்ப்பணிப்புடன் நாம் செல்லும் பாதையே சாத்தியமான வழிமுறையாகும். இவ்வழிமுறையே வெற்றிகொள்ளும் என்பது நிச்சயம்’ என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரி வளாகத்தில் புதிய மகிந்தோதயம் தொழில்நுட்ப பீடக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘கடந்தகால தவறான அரசியல் முன்னெடுப்புக்கள் பாரிய அழிவுகளையும், இழப்புக்களையும், துன்பங்களையும் எமக்கு தந்துள்ளன.இந்நிலையை நாம் மீண்டும் உருவாக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக செயற்பட வேண்டும்.

நாம் செல்லும் பாதை நேரிய பாதையாகும். பல்வேறு அர்ப்பணிப்புக்கள், தியாகங்களுக்கு மத்தியில் நாம் தொடர்ந்தும் நடைமுறைச் சாத்தியமான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்பயணமே நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. எமது இந்த நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை அன்று எதிர்த்தவர்கள் இன்று அதே வழிக்கு வந்துள்ளதை நீங்களே கண்கூடாகக் காண்கிறீர்கள்’ என்றார்.

30 மில்லியன் ரூபா செலவில் இப் புதிய கட்டிடம் மத்திய கல்வி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

Related Posts