Ad Widget

அரியாலையில் வீடொன்றின் மீது தாக்குதல்

attack-attackஅரியாலையில் வீடொன்று தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸில் இன்று முறைப்பாடொன்று செய்யப்ட்டுள்ளது.

அரியாலைப் பகுதியில் நேற்றிரவு இரண்டு குடும்பத்தினருக்கிடையே நடைப்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று குறித்த வீட்டிற்குள் புகுந்த அயல் வீட்டினர் தளபாடங்கள் அடங்கலாக தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டுப்பாவைனைப் பொருட்களையும் உடைத்து நொறுக்கியதாக பொலிஸ்நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு தாக்குதலுக்குள்ளான வீட்டின் முன்புறமாக மோட்டார் வண்டிகள் நிறுத்தப்பட்டமை தொடர்பிலேயே எழுந்த இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்டுகிறது.

Related Posts