Ad Widget

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.கிளைக்கு புதிய நிர்வாகசபை தெரிவு!

stethoscope-doctor-nerusஅரச மருத்துவ வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.கிளையின் தெரிவுகள் போட்டியின்றி நடைபெற்று முடிந்துள்ளன. டாக்டர் எஸ்.நிமலன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த முறை கடும் போட்டிக்குள் தேர்தல் மூலம் தலைவர் உள்ளிட்ட பதவிகள் தெரிவு செய்யப்பட்டபோதும், இம்முறை ஏகமனதாகத் தெரிவுகள் நடைபெற்றுள்ளன.

தலைவராக கடந்த முறை தெரிவு செய்யப்பட்டிருந்த டாக்டர் எஸ்.நிமலன் மீண்டும் இம்முறையும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செயலாளர் அ.அரிகரன், உப தலைவர் வை.திவாகரன், பொருளார் ப.செந்தூரன், உதவிச் செயலாளர் ஆர்.ராகுலன், பத்திராசிரியர் எஸ்.சந்திரகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர நிர்வாக சபை உறுப்பினர்களாக செல்சியா மலர்விழி, ஏ.அசோக்குமார், ரி.பாலமுரளி, கே.கணேசானந்தன், கே.ராஜசேகரன், எஸ்.கணேஸ்குமார், எஸ்.செல்வாகரன், எஸ்.அறிவுச்செல்வன், திருமதி பி.முல்லை, ஆர்.சர்மா, ஜே.ஜி.பி நிஸங்க ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related Posts