Ad Widget

அரச ஊழியர்கள் அனைவரையும் இன்று முதல் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு!

அரச ஊழியர்கள் அனைவரையும் இன்று (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அவர்கள் அனைவரும் இன்றுமுதல் கடைமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களைக் கொண்டும் அத்தியாவசியமான அரச பணிகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக வெளியிடப்பட்ட அனைத்து சுற்றுநிருபங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இதுதொடர்பாக அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றுநிருபங்களை வெளியிட்டுள்ளது.

Related Posts