Ad Widget

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகஜர் கையளிப்பு

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜர் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சி.வி.விக்கினேஸ்வரன், இரா.சம்பந்தன், எம்.எ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாமன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், நோகராதலிங்கம், கோ.கருணாகரம், சாணக்கியன் இராசமாணிக்கம், தவராசா கலையரசன், சித்தார்தன், மனோகணேசன், ராதாகிருஸ்ணன் உள்ளிட்ட 15 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

Related Posts